பிரதமர் மோடி விரைவில் இலங்கை பயணம்?
வங்காள விரிகுடா நாடுகளின் கூட்டமைப்பான BIMSTEC மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மார்ச் மாதம் இலங்கை செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவிகளை செய்து வருகிறது.
இதற்கு பிரதிபலனாக சமீபத்தில் திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை இந்தியாவுக்கு இலங்கை வழங்கியது.
இதேவேளை மன்னார் வளைகுடா பகுதியில் சீனாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த மெகா காற்றாலை மின்திட்டங்களை இலங்கை ரத்து செய்தது.
இதை ஜீரணிக்க முடியாத சீனா தற்போது தமிழகம், ஈழத்தமிழ் மீனவர் பிரச்சனையில் தலையீட்டை தொடங்கி உள்ளது.
எனவே தமிழகம், ஈழத்தமிழர் மீனவர் பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு காண்பது குறித்து இந்திய தரப்புடன் இலங்கை அமைச்சர் பீரிஸ் விவாதித்துள்ளார்.
மேலும் வங்காள விரிகுடா நாடுகளின் கூட்டமைப்பான BIMSTEC அமைப்பின் மாநாடு மார்ச் மாதம் இலங்கையில் நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்க கூடும் எனவும் கூறப்படுகிறது.
இந்த பயணத்தின் போது ஈழத் தமிழ் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசக்கூடும் என தெரிகிறது.
அதேபோல் தமிழகம், ஈழத் தமிழ் மீனவர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண்பது தொடர்பாகவும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.