பிரித்தானியாவில் மாறும் காட்சிகள்... இளவரசர் ஹரி குறித்த ஆரூடம் பலிக்குமா?
பிரித்தானிய மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், இளவரசர் வில்லியம் தன் மனைவியை கவனித்துக்கொள்ளவேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகியுள்ளார்.
ஆக, மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், பெரும் சுமை இளவரசி ஆன் தலையில் விழுந்துள்ளது.
இளவரசி ஆன் தலையில் பெரிய சுமை
மன்னர் சார்லசின் தங்கையான இளவரசி ஆனுக்கு 73 வயதாகிறது. மன்னருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த வயதில், மன்னர் செய்யவேண்டிய பணிகளில் 70 சதவிகிதத்தையும் இளவரசி ஆன்தான் செய்துவருகிறார்.
சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றதுமே, பணி செய்யும் மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிட்ட நிலையில், தற்போது மன்னரும் இல்லாமல், இளவரசர் வில்லியமும் கேட்டும் இல்லாமல், அனைத்து பொறுப்புகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்துவருகிறார் இளவரசி ஆன்.
மாறும் காட்சிகள்
ஆக, இளவரசர் ஹரியும் மேகனும் இருந்திருந்தால், இப்படிப்பட்ட சிக்கலான நேரத்தில் அவரால் உதவியிருக்கமுடியுமே என பிரித்தானிய மக்கள் சிந்திக்கத் துவங்கியுள்ளார்கள்.
ஆகவே, இளவரசர் ஹரியையும் மேகனையும் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழைக்கவேண்டும், அல்லது, ஹரி, மேகன் தம்பதியர் பிரித்தானியாவுக்குத் திரும்பவேண்டும் என்ற குரல்கள் அதிக அளவில் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
ஏற்கனவே, ராஜ குடும்பத்துக்கும் இளவரசர் ஹரிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஜோதிடர்கள் கணித்துள்ளார்கள். அப்படியிருக்கும் நிலையில், மக்களும் ஹரி வரவேண்டும் என குரல் கொடுக்கத் துவங்கியுள்ளதால் பிரித்தானிய ராஜ குடும்பத்தில் காட்சிகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |