இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது... ஹாரிக்கும், வில்லியமுக்கும் இடையில் வந்து நின்ற நபர்! யார் அவர் தெரியுமா?
இளவரசர் பிலிப்பிற்கான இறுதிச்சடங்கின் போது, தனக்கும் ஹாரிக்கும் இடையே நிற்குமாறு பீட்டர் பிலிப்ஸிடம் வில்லியம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா மகாராணியின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த 9-ஆம் திகதி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது நல்லடக்கம் கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்தது. அவரின் இறுதிச்சடங்கின் போது, அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிலிப்பிற்கான இறுதிச்சடங்கின் போது, தனக்கும் ஹாரிக்கும் இடையே நிற்குமாறு பீட்டர் பிலிப்ஸிடம், இளவரசர் வில்லியம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
செயிண்ட் ஜார்ஜ் சேப்பலில் நேற்று முன் தினம் நடந்த இறுதி சடங்கின் போது இளவரசி அன்னே (Anne, Princess Royal)-வின் மகன் பீட்டர் பிலிப்ஸ் (Peter Phillips) இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரிக்கு இடையே நிற்பதை காண முடிந்தது.
இப்படி நிற்கும் படி இளவரசர் வில்லியம் தான் பிலிப்பிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இளவரசர் பிலிப்பின் சவப்பெட்டி கொண்டு சென்ற போது, இவர்கள் இருவருக்கும் நடுவே பீட்டர் பிலிப்ஸ் சென்றார்.
ஹாரி மற்றும் மேகன் அரச குடும்பம் குறித்து அளித்த நேர்காணலுக்கு பின் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் நேருக்கு நேர் முதல் முறையாக சந்தித்து கொண்டனர்.
இருப்பினும் இறுதிச்சடங்கிற்கான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க, தேவாலயத்திற்குள் நுழைந்த போது, வில்லியம் மற்றும் கேட் இருவருக்கும் எதிரிலே ஹாரி அமர்ந்தார்.
ஹாரி, அப்படி உட்கார்ந்தும், வில்லியமை பார்க்கமால், தன்னுடைய தாத்தாவின் சவப்பெட்டியை நோக்கியே தனது பார்வையை வைத்திருந்தார்.
இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளும் நிலை வந்த போதும், இருவரும் முன்பு போல் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், அதே சமயம் கடந்த வாரம் வில்லியம் சகோதரரான ஹாரியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உருக்கமாக பேசியதாக செய்தி வெளியானது நினைவுகூரத்தக்கது.