அடம்பிடிக்கும் ஆண்ட்ரூ... விண்ட்சர் மாளிகைக்கு மன்னரிடம் இருந்து பறந்த உத்தரவு

Royal Family King Charles III
By Arbin Aug 18, 2024 06:57 AM GMT
Report

விண்ட்சர் மாளிகையில் இருந்து இளவரசர் ஆண்ட்ரூ வெளியேற மறுத்துவருவதை அடுத்து, சார்லஸ் மன்னர் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

31 அறைகள் கொண்ட விண்ட்சர் மாளிகை

விண்ட்சர் மாளிகையில் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு என அளிக்கப்பட்டுவந்த 10 பேர்கள் கொண்ட பாதுகாப்பு குழுவினரை அங்கிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் சார்லஸ் மன்னர்.

அடம்பிடிக்கும் ஆண்ட்ரூ... விண்ட்சர் மாளிகைக்கு மன்னரிடம் இருந்து பறந்த உத்தரவு | Windsor Mansion King Axes Private Security

தற்போது விண்ட்சர் மாளிகையில் உயரடுக்கு பாதுகாப்பு தேவையில்லாதது என்றே மன்னர் குறிப்பிட்டுள்ளார். விண்ட்சர் மாளிகை தொடர்பான நெருக்கடி அதிகரித்துவரும் நிலையிலும், மன்னரும் இளவரசர் ஆண்ட்ரூவும் ஸ்கொட்லாந்தின் பல்மோரல் எஸ்டேட்டில் ஒன்றாக தங்க இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 31 அறைகள் கொண்ட விண்ட்சர் மாளிகைக்கு 10 பேர்கள் கொண்ட பாதுகாப்பு குழு ஒன்றை நியமிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான செலவுகளை மன்னரே ஏற்றெடுத்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு வரையில், ஆண்டுக்கு 3 மில்லியன் பவுண்டுகள் செலவில் லண்டன் பொலிசார் குழு ஒன்று விண்ட்சர் மாளிகையில் பாதுகாப்பு பணிகளை முன்னெடுத்து வந்தது.

ஆனால் இளவரசர் ஆண்ட்ரூ வன்கொடுமை வழக்கில் சிக்கியதை அடுத்து, மறைந்த ராணியாரால் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டது. அதன் பின்னரே, 10 பேர்கள் கொண்ட தனியார் பாதுகாப்பு குழு ஒன்று பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

மன்னர் ரத்து செய்திருந்தார்

ஆனால் தற்போது அவர்களையும் மன்னர் நீக்கியுள்ளார். இதனால், பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு இளவரசர் ஆண்ட்ரூ விண்ட்சர் மாளிகையில் இருந்து வெளியேறும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது.

அடம்பிடிக்கும் ஆண்ட்ரூ... விண்ட்சர் மாளிகைக்கு மன்னரிடம் இருந்து பறந்த உத்தரவு | Windsor Mansion King Axes Private Security

உண்மையில் விண்ட்சர் மாளிகையில் இருந்து ஆண்ட்ரூவை வெளியேற்றவே மன்னர் பாதுகாப்பு குழுவினரை நீக்கியுள்ளார். அதாவது, அவர்களுக்கான ஒப்பந்தம் அக்டோபர் மாதம் முடிவுக்கு வருகிறது. அதுவரையில் அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்றே அரண்மனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஏற்கனவே இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆண்டுக்கு 4 மில்லியன் பவுண்டுகள் தொகையை மன்னர் ரத்து செய்திருந்தார். இருப்பினும் அவர் விண்ட்சர் மாளிகையில் இருந்து வெளியேறவில்லை.

தமது முன்னாள் மனைவியுடன் தற்போதும் விண்ட்சர் மாளிகையில் ஆண்ட்ரூ வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US