தெரிந்து கூட மீனுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.. உஷாரா இருங்க!
நம் முன்னோர்கள் ஆயுர்வேத முறையில் உணவை சாப்பிடுவதிலும் உடல்நலன் கருதி பல்வேறு விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும்.
அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி நெறிபடுத்தி உள்ளனர். ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி நமது ஆரோகியத்தை மேம்படுத்துகிறது.
அவ்வாறு இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை உடலில் எதிர்மறை விளைவுகளை உண்டு பண்ணும். அது போல சில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
- எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை கட்டாயமாக சேர்த்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிடுவதால் சளி, மலசிக்கல் போன்ற உடல் உபாதைகள் உண்டாக சில வாய்ப்புகள் உண்டு.
- பசளைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவற்றில் உள்ள ஒரே பண்பு உடலில் தோஷம் உண்டு பண்ணுவதால் இத்தகைய பாதிப்புகள் உண்டாக்குவதாக கூறப்படுகின்றது.
- திப்பிலியுடன் மீன், அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் குடல் இறப்பு உண்டாகி விடுமாம். மீன் பொறித்த எண்ணெய் கூட திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.
- நீங்கள் நுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்காக துளசி இருக்கும் கேப்ஸ்யூல் அல்லது துளசி சாறு அருந்தியிருந்தால் அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாதாம். தேன் சாப்பிட்ட பிறகு ஒயினோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக் கூடும்.