எரிஞ்சிக்கிட்டே மரத்துல மோதிச்சு! ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்ன தகவல்
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் அதை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர்.
இந்த ஹெலிகாப்டர் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து எரிந்தது. இதில், 11 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இறந்துவிட்டாரா என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.
இந்த நிலையில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், பெரும் சத்ததுடன் எரிஞ்சிக்கிட்டே மரத்தின் மீது மோதி ஹெலிகாப்டர் நெருப்புடன் கீழே விழுந்தது, ஒரே புகைமூட்டமாக இருந்தது. உள்ளிருந்தவர்கள் அப்படியே அடுத்தடுத்து எரிந்தபடியே கீழே வந்து விழுந்தனர் என கூறியுள்ளனர்.