அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டை பார்க்க சென்ற தாய் மற்றும் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டை பார்க்க சென்ற தாய் மற்றும் 2 வயது குழந்தைக்கு அரங்கத்தின் மூன்றாவது அடுக்கில் இருந்து தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் டியாகோ பகுதியில் உள்ளது Petco Park என்னு பேஸ்பால் மைதானம்.
கடந்த சனிக்கிழமை மாலை அங்கு நடைபெற்ற போட்டியை காண சுமார் 39,000 பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
அப்போது, மாலை 4 மணியளவில், அரங்கத்தின் மூன்றாவது அடுக்கு பால்களியில் இருந்து, 40 வயது மிக்க ஒரு பெண் மற்றும் அவர் கையில் வைத்திருந்த 2 வயது ஆண் குழந்தை இருவரும் தவறி கீழே விழுந்தனர்.
Petco Park, in San Diego. Photograph: Gregory Bull/AP
இதில் குழந்தை உட்பட இருவரும் சம்பவ இடத்திலேயே 4.15 மணியளவில் உயிரிழந்தனர். அவசர உதவிகள் உடனடியாக வரவழைக்கப்பட்டபோதும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை என அங்கு வந்த சான் டியாகோ பொலிஸார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சான் டியாகோ காவல்துறை கொலைப்பிரிவின் (San Diego Police Homicide Unit) புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர், இந்த மரணங்கள் சந்தேகத்திற்குரியதாகத் தோன்றியதாக் பொலிஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் சான் டியாகோவில் வசிப்பவர்கள் என்பதைத் தவிர, வேறு எந்த தகவலையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.