பிரித்தானியாவில் எனக்கு உதவுங்கள் என அலறிய பெண்! ஆரம்ப பாடசாலை அருகே நேர்ந்த துயரம்
இங்கிலாந்தில் இளம்பெண்ணொருவர் கத்திக்குத்துக்கு ஆளாகி, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சரிந்த இளம்பெண்
லூடன் நகரில் உள்ள ஆரம்பப் பாடசாலை அருகே, 20 வயதுகளில் உள்ள பெண்ணொருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளானார்.
குறித்த இளம்பெண் தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவிட்டு திரும்பும்போது, 30 வயதுடைய நபர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து சரிந்த அப்பெண், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தாக்குதல்தாரியை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திட்டமிட்ட தாக்குதல்
இச்சம்பவம் குறித்து உள்ளூர்வாசிகள் கூற்றுப்படி, அப்பெண் முதலில் வீதியில் துரத்தப்பட்டார். பின்னர் தொண்டையைப் பிடித்துக்கொண்டு 'எனக்கு உதவுங்கள்.,எனக்கு உதவுங்கள்..எனக்கு இரத்தம் வருகிறது' என அலறினார் என்று கூறியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான பெண் கத்தியால் குத்திய நபருக்கு தெரிந்தவர் என்று நம்புவதாக கூறிய பொலிஸார், இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று கருதுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 'இந்த சம்பவம் பகலில் பரபரப்பான நேரத்தில் நடந்தது மற்றும் பலர் நேரில் பார்த்துள்ளனர். எந்தவொரு தகவலும் இருந்தால் முன்வருமாறு மக்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்' எனவும் கூறியுள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து பாடசாலை ஊழியர்கள் ஒரு மணிநேரம் வளாகத்தை பூட்டினர். அத்துடன் பாடசாலையில் உள்ள அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |