பட்டப்பகலில் இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி குச்சியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்! நடுங்க வைக்கும் சம்பவம்
இந்தியாவில் இளம்பெண் ஒருவரை நான்கு இளைஞர்கள் நிர்வாணப்படுத்தி குச்சியால் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் யாத்கிரி நகர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இதையடுத்து காவலர்கள் வீடியோவை ஆதாரமாக கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது வீடியோவில் உள்ள நான்கு இளைஞர்களை பொலிசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் ஒரு வருடத்திற்கு முன் நடந்தது தெரிய வந்துள்ளது.
பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கியது ஏன் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குறித்த பெண் அங்குள்ள வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அந்த பெண் வேலை செய்து வந்த வீட்டில் இருந்த நகை திருடுபோனதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த பெண்ணின் மீது சந்தேகப்பட்டு இந்தப் பெண்ணை விசாரிப்பதாக கூறி நான்கு இளைஞர்கள் அவரை நிர்வாணப்படுத்தி குச்சிகளை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.
அப்போது அந்த பெண், வலி தாங்கமுடியாமல், நான் நகைகளை திருடவில்லை என இளைஞர்களிடம் கெஞ்சியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ கர்நாடக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.