கணவரின் உறவினர்களால்.. மாதக்கணக்கில் இளம்பெண்ணுக்கு அரங்கேறிய கொடுமை! வெளியான அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் இளம்பெண்ணை 8 ஆண்கள் சேர்ந்து மாதக்கணக்கில் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானவை சேர்ந்த இளம்பெண் ஒருவரை தனது கணவரின் உறவினர்கள் 8 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி மாதக்கணக்கில் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத பெண் ஹரியானா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, வரதட்சணை காரணமாக அடிக்கடி எனது கணவருக்கும் எனக்கும் இடையில் சண்டைகள் வருவது வழக்கம்.
அப்போது என் கணவர் குடித்து விட்டு என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல சித்ரவதைகளை செய்துள்ளார். ஒரு நாள் வரதட்சணை பிரச்னை பெரிய அளவில் வெடிக்க என்னை வீட்டை விட்டு நடு இரவில் துரத்தினார்.
அப்போது அங்கு வந்த எனது கணவரின் உறவினர்கள் 8 பேர் என்னை சரமாரியாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து வீடியோவும் எடுத்து வைத்து கொண்டனர்.
இதை எனது கணவரிடம் தெரிவித்த போது அவர் வெளியே யாரிடமும் சொல்ல கூடாது என்று என் வாயை அடைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் குறித்து பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே அந்த பெண்ணுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய அனைவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.