அமெரிக்காவில் குழந்தையுடன் சென்ற இந்தியர் மீது இனவெறுப்புத் தாக்குதல் நடத்திய பெண்
அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான இனவெறுப்புத் தாக்குதல் தொடர்கிறது. சமீபத்தில் இந்தியப் பெண் ஒருவரும் அவரது மகளும் ஷாப்பிங் சென்றிருந்தபோது, எங்கு பார்த்தாலும் நீங்களே இருக்கிறீர்களே என்று கூறி அமெரிக்கப் பெண் ஒருவர் அவர்களிடம் வம்புச்சண்டைக்குப் போன விடயம் நினைவிருக்கலாம்.
தற்போது, தன் குழந்தையுடன் விளையாட்டு மைதானத்துக்குச் சென்ற இந்தியர் ஒருவரை ஒரு அமெரிக்கப் பெண் இனரீதியாக தாக்கியுள்ளார்.
குழந்தையுடன் விளையாட்டு மைதானம் சென்றிருந்த இந்தியர்
லண்டனில் வளர்ந்தவரான ஆஷிஷ் (Ashish Prashar, 40), போரிஸ் ஜான்சன் லண்டன் மேயராக இருந்தபோது, அவருக்கு ஊடகச் செயலராக பணியாற்றியவர்.
கடந்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 7ஆம் திகதி, ஆஷிஷ் 18 மாதக் குழந்தையான தனது மகனுடன் நியூயார்க்கிலுள்ள பூங்கா ஒன்றிற்குச் சென்றுள்ளார். அப்போது அவர், பாலஸ்தீனிய பெண் ஒருவர் தனக்கு பரிசாக கொடுத்த பால்ஸ்தீனிய ஸ்கார்ஃப் ஒன்றை கழுத்தில் அணிந்திருந்திருக்கிறார்.
இனரீதியாக தாக்கிய பெண்
அப்போது பெண்ணொருவர் ஆஷிஷை நெருங்கி, நீ என்ன பாலஸ்தீனிய ஆதரவாளரா, நீங்களெல்லாம் நாய்கள், அரபியர்கள் எல்லாம் நாய்கள், உன் மக்கள் குழந்தைகளை எரிக்கிறார்கள் தெரியுமா? உன் குழந்தையையும் யாராவது எரிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சத்தமிட்டுள்ளார்.
உடனே தனது மொபைலை எடுத்து நடந்த சம்பவத்தை படமாக்கியுள்ளார் ஆஷிஷ். உடனே ஆஷிஷ் மீதும் அவரது மகன் மீதும் அந்தப் பெண் தனது மொபைலை வீச, குழந்தையை தனது கால்களுக்கிடையில் பத்திரமாக பிடித்துவைத்துகொண்டுள்ளார் ஆஷிஷ்.
அடுத்த நிமிடம், தன் கையிலிருந்த காபி கப்பை ஆஷிஷ் மீது அந்தப் பெண் வீச, சூடான காபி அவரது தோள் மற்றும் கழுத்தில் பட்டுள்ளது.
A woman - Hadasa Bozakkaravani has been charged with hate crime after she threw coffee at Ashish Prashar, an American of Indian origin. Reports suggest that Hadasa attacked Ashish presumably as he was wearing a keffiyeh, a traditional clothing associated with Palestinians. pic.twitter.com/OWIrtjWUvo
— Mojo Story (@themojostory) November 29, 2023
அத்துடன் ஆஷிஷுடைய மொபைலை அந்தப் பெண் பறிக்க முயல, அந்த வழியாக சென்ற ஒருவர் தலையிட்டபிறகே அந்தப் பெண் ஆஷிஷை விட்டிருக்கிறார்.
யார் அந்தப் பெண்?
அந்தப் பெண்ணின் பெயர் Hadasa Bozakkaravani (48). ஆஷிஷ் அந்தப் பெண் மீது உடனே புகாரளித்தும்,அமெரிக்கப் பொலிசார் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். 14 நாட்களாக பொலிசார் அந்தப் பெண்ணை கைது செய்யவில்லையாம்.
ஆஷிஷ் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ய, அது வைரலாக, மக்கள் ஆதரவு பெருக, அந்தப் பெண்ணை கைது செய்ய மக்கள் வற்புறுத்த, பின்னர், நவம்பர் மாதம் 21ஆம் திகதி, அந்தப் பெண்ணே பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். அவர் மீது, நான்கு இன வெறுப்புக் குற்றச்சாட்டுகள், தாக்குதல், குழந்தை மீது தாக்குதல், அலட்சியத்தால் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டது முதலான ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |