பிரித்தானியாவில் பட்டப்பகலில் இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்! குற்றவாளி யார்?
பிரித்தானியாவின் பிராட்போர்ட் நகர மையத்தில் சனிக்கிழமை மதியம் ஒரு பெண் கத்திக்குத்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்
பிரித்தானியாவின் Bradford நகர மையத்தில் வெஸ்ட்கேட் (Westgate) மற்றும் ட்ரூட்டன் சாலை (Drewton Road) சந்திப்பில் சுமார் 3:21 மணி அளவில் இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு யார்க்ஷயர் பொலிஸார் (West Yorkshire Police) தகவலின்படி, ஒரு மர்ம நபர் 27 வயதான பெண்ணை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார் என்று தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணை காவல்துறை இதுவரை அடையாளம் காணவில்லை, ஆனால் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த கொடுமை
அதே சமயம் மேற்கு யார்க்ஷயர் பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேற்கு யார்க்ஷயர் காவல்துறையின் கொலை மற்றும் முக்கிய விசாரணை குழுவின் தலைமை காவல் ஆய்வாளர் ஸ்டேசி அட்கின்சன்(Stacey Atkinson), "பரபரப்பான பகுதியில் பகல் நேரத்தில்" நடந்த இந்த சம்பவத்தை "கொடுமை" என்று குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளியை கைது செய்வதில் கவனம் செலுத்தி விசாரணை நடந்து வருகிறது. தாக்குதல் நடத்திய நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை அறிந்திருக்கலாம் என்று டிசிஐ அட்கின்சன் நம்புகிறார்.
இந்த சம்பவத்தின் போது அங்கு இருந்தவர்கள் அல்லது தொடர்புடைய தகவல்கள் இருந்தால் முன்வர வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bradford city centre stabbing,
woman stabbed Bradford,
27 year old woman stabbed Bradford,
murder investigation Bradford,
West Yorkshire Police Bradford stabbing,