பொலிஸ் ஜோடிக்கு திருமணம்... இரவோடு இரவாக மாயமான மணப்பெண்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள்களாக பணி செய்யும் இருவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணத்துக்கு முந்தைய இரவு, மணமகள் மாயமானதால் பெரும் பரபரப்பு உருவானது.
திருமணத்துக்கு முன் மாயமான மணப்பெண்
உத்தரப்பிரதேசத்திலுள்ள மீரட் நகரைச் சேர்ந்த சந்தியா பரத்வாஜ் (25) என்னும் பெண்ணுக்கும், அதுல் ஷர்மா என்னும் நபருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது.
மணமகனும் மணமகளும் பொலிஸ் கான்ஸ்டபிள்களாக பணி செய்துவருகிறார்கள்.

சனிக்கிழமை இரவு சந்தியா மாயமாக, மகளைக் காணாத சந்தியாவின் தந்தையான சுபாஷ் ஷர்மா, தன் மகளை அங்கித் சௌகான் (28) என்பவர் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிசில் புகார் செய்துள்ளார்.
அத்துடன், அவர் ஏற்கனவே மணமகனான அதுலை மொபைலில் அழைத்து, சந்தியாவை திருமணம் செய்துகொண்டால் அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் சுபாஷ் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
பொலிசார் சந்தியாவை தேடிச் செல்ல, எட்டு மணி நேரத்துக்குப்பின் Buxar என்னுமிடத்தில் அவரைக் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தியாவிடம் பொலிசார் விசாரிக்க, அவர், பல வருடங்களாகவே தனக்கு அங்கித்தைத் தெரியும் என்றும், அங்கித் தன்னைக் கடத்தவில்லை என்றும், தான் தன் சுயவிருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவல் தெரிந்ததும், அதுல் வீட்டார் திருமண ஏற்பாடுகளை நிறுத்தியுள்ளனர்.
விடயம் என்னவென்றால், அங்கித் நீண்ட குற்றப்பின்னணி கொண்டவர். அவர் மீது, கொலை, கொள்ளை உட்பட குறைந்தது 9 வழக்குகள் உள்ளன!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |