கர்ப்பிணிக்கு அனுமதி மறுப்பால் வீட்டில் பிரசவம்! இரட்டை குழந்தைகளுடன் தாயும் உயிரிழப்பு..நெஞ்சை உலுக்கிய சம்பவம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனை அனுமதி மறுத்ததால், வீட்டில் பிரசவித்த தாய், சேய் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகுருமாவட்டத்தில் உள்ள பாரதிநகரைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவருக்கு கடந்த புதன்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டதால், பக்கத்து வீட்டுக்காரரின் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு, மாநில அரசின் தாய் உடல்நல அட்டையை மருத்துவமனை கேட்டுள்ளது. ஆனால், கஸ்தூரியிடம் அட்டை இல்லாததால் மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது. இதனால் வீட்டிற்கு திரும்பிய கஸ்தூரி அங்கேயே இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
அப்போது குழந்தை பிறப்பில் சிக்கல், அதிக ரத்தப்போக்கு காரணமாக இரட்டை குழந்தைகளுடன், தாய் கஸ்தூரியும் உயிரிழந்தார். சம்பவத்தின்போது கஸ்தூரியின் கணவர் உடன் இல்லை என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்த கஸ்தூரிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.
ANI