கோமாவில் குழந்தை பெற்ற அனுபவத்தை பற்றி விவரிக்கும் பிரித்தானிய பெண்! ஒரு சுவாரஸ்ய பதிவு
இங்கிலாந்தில் பெண் ஒருவர் கோமாவில் குழந்தை பெற்றெடுத்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள Walsall பகுதியை சேர்ந்தவர் Ellie Wright(29), கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து சில நாட்களுக்கு பிறகு சி-பிரிவு மூலம் 10 வாரங்களுக்கு முன்னதாகவே குழந்தையை பெற்றெடுத்தார்.
பிரசவம் முடிந்த பின்னரும் மூன்று வாரங்கள் கோமாவில் இருந்தார், இந்நிலையில் ஐந்து வாரங்களுக்கு பிறகே தனது குழந்தையை கண்ணால் பார்த்துள்ளார்.
அந்த தருணம் குறித்து அவர் கூறியதாவது, என் வாழ்க்கையைத் திரும்பக் கொடுத்த செவிலியர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு பிரசவம் முடிந்த பிறகு நான் குழந்தையை பார்க்கவே இல்லை. அதற்குள் நான் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டேன். கோமாவில் இருக்கும்போது தனது அம்மா தன்னிடம் பேசுவதைக் கேட்க முடிந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய Ellie Wright, தற்போது பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.
இது சரியாக சில வருடங்கள் எடுக்கும் என்றாலும் கூடிய விரைவில் குணமாகிவிடுவார் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.