தேடி வந்த முன்னாள் காதலி! கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த மனைவி..மூவரும் ஒரே வீட்டில் குடித்தனம்
திருப்பதியில் காதல் கணவருக்கு முன்னாள் காதலியை திருமணம் செய்து வைத்த பெண்
மூவரும் ஒரே வீட்டில் வாசிக்க வேண்டும் என முடிவெடுத்தனர்
இந்திய மாநிலம் ஆந்திராவில் கணவருக்கு முன்னாள் காதலியை மனைவியே திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கல்யாண். டிக் டாக் மூலம் பிரபலமான இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் கடப்பாவைச் சேர்ந்த விமலா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின்னர் இருவரும் சேர்ந்து டிக் டாக் வீடியோக்களில் நடித்து மேலும் பிரபலமாகினர். இந்த நிலையில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நித்யாஸ்ரீ என்ற பெண் தன்னை சந்தித்ததாக கணவரிடம் விமலா கூறியுள்ளார்.
அவர் கல்யாணை ஏற்கனவே காதலித்ததாகவும், இருவரும் சேர்ந்து டிக் டாக் வீடியோக்கள் செய்து வந்ததாகவும், சில காரணங்களால் தங்கள் காதல் முறிந்துவிட்டதாகவும் விமலாவிடம் கூறியுள்ளார்.
மேலும் தங்களை ஒன்று சேர்த்து வையுங்கள் என விமலாவிடம் அப்பெண் கெஞ்சியுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது கணவரை நித்யாஸ்ரீக்கு திருமணம் செய்து வைத்தார் விமலா.
அத்துடன் தானும் அவர்களுடன் ஒரே வீட்டில் இருப்பேன் என சத்தியம் வாங்கிக் கொண்டார்.
கோவிலில் கல்யாண் - நித்யஸ்ரீ திருமணம் நடந்துள்ளது. மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.