தெற்கு லண்டனில் கத்திக்குத்து: பெண் மரணம், ஒருவர் கைது
குரோய்டனில் சனிக்கிழமை காலை நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒரு இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
காலை 9 மணிக்கு சற்று பிறகு ஃபிரித் சாலைக்கு அழைக்கப்பட்ட பொலிஸார் மற்றும் அவசர கால சேவை குழுவினர், காயமடைந்த இரண்டு பேரைக் கண்டனர்.
சம்பவ இடத்திலேயே இருபது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அவர் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்த சூழ்நிலைகளை கண்டறிய பெருநகர காவல்துறை கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் இந்த தகராறு அருகிலுள்ள ஒரு முகவரியில் தொடங்கி, பின்னர் ஃபிரித் சாலைக்கு பரவியதாக தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |