கருத்தரிப்பதற்காக கழிவு நீரை குடிக்க வைத்த மந்திரவாதி.., மூட நம்பிக்கையால் பறிபோன பெண்ணின் உயிர்
மந்திரவாதி ஒருவர் கருத்தரிப்பதற்காக கழிவு நீரை குடிக்க வைத்ததால் 35 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூட நம்பிக்கையால் உயிரிழப்பு
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது பெண் அணு ராதா. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் குழந்தை இல்லை.
இதனால், தனது அம்மாவை அழைத்துக் கொண்டு மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அங்கு அவர் அணு ராதாவுக்கு பேய் பிடித்ததாக கூறியுள்ளார்.
மேலும், பேயை விரட்டவும், கருத்தரிக்க வைப்பதற்காகவும் பூஜை செய்ய வேண்டும், அதற்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும் எண்டு மந்திரவாதி கூறியுள்ளார். இதனை நம்பிய அணு ராதா அவருக்கு அட்வான்ஸ் பணம் ரூ.22 ஆயிரம் தந்துள்ளார்.
பின்னர் சடங்குகளை ஆரம்பித்த மந்திரவாதி, அனுராதாவின் தலைமுடியை இழுத்து கழிவுநீரை குடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். இதனை அவரது அம்மா தடுக்க முயன்றும் அனுராதாவுக்கு தொடர்ந்து கழிவு நீரை குடிக்க வைத்துள்ளார்.
பின்னர், பூஜை நடக்கும் போதே உடல்நிலை சரியில்லாமல் அணு ராதா கீழே விழுந்தார். இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர், இதுகுறித்து அனுராதாவின் அப்பா உள்ளிட்ட உறவினர்கள் பொலிஸில் புகார் அளித்ததன்பேரில் மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |