பிரித்தானியாவில் நள்ளிரவில் 20 வயது பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்! மர்மநபர்கள் வெறிச் செயல்
பிரித்தானியாவில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் மான்சென்ஸ்டரின் Wythenshawe-வில் இருக்கும் Kirkup Gardens பூங்காவில் அரங்கேறியுள்ளது. இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
இதனால் இந்த சம்பவம் தொடர்பாக யாரேனும் எந்த ஒரு தகவலும் தெரிந்தால் பொலிசாரை தொடர்பு கொள்ளும் படி கூறப்பட்டுள்ளது.
மேலும், தலைமை ஆய்வாளர் காரா சார்லஸ்வொர்த்(Cara Charlesworth) கூறுகையில், நேற்றிரவு உண்மையிலேயே ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.
இந்த மோசமான இந்த கட்டத்தில் இது ஒரு சீரற்ற மற்றும் மோசமான தாக்குதலாகத் தோன்றுகிறது. இந்த செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இதனால் இப்பகுதியில் பொலிசார் அதிகம் குவிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு நடந்த சம்பவம் என்பதால், இதை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை, இருப்பினும் யாரேனும் ஒருவர் கூட பார்த்திருந்தால், பொலிசாரை தொடர்பு கொள்ளலாம்.
அது பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில், இது ஒரு மோசமானது, அந்த பெண் ஒரு நல்ல பெண், அவள் நல்ல நிலையில் இருப்பாள் என்று நம்புகிறேன்.
பூங்காவில் பொதுவாக எந்த பிரச்சனையும் இல்லை, அது மிகவும் நன்றாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.