மதுவை ஒழிக்க வேண்டும் என்று விஜய் முன்பு கண்ணீர் விட்டு அழுது பேசிய பெண்
மாணவ மாணவியருக்கு விருது வழங்கும் விழாவில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று விஜய் முன்பு பெண் ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
மதுவை ஒழிக்க வேண்டும்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் விருது மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கி வருகிறார்.
விஜய் வழங்கும் 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், மாமல்லபுரத்தில் முதற்கட்ட பரிசளிப்பு விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி,கன்னியாகுமரி,சிவகங்கை,திண்டுக்கல்,தேனி,நாகப்பட்டினம், புதுக்கோட்டை,பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில உள்ள 600 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது விருது பெற்ற மாணவியின் தாய் ஒருவர் பேசுகையில், "குடிகார கணவரால் எனது மகளின் படிப்பு வீணாகிவிட்டது. அதையெல்லாம் தாண்டி இன்றைக்கு தனி ஆளாக போராடி என் மகளை சாதிக்க வைத்து இருக்கிறேன்.
மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்" என்று கண்ணீர் விட்டு அழுதபடியே பேசினார். பின்னர் விஜய் அவருக்கு ஆறுதல் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |