படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக சிறுமியை நாய் போல கட்டிப்போட்டு கொலை செய்த வழக்கு: ஜேர்மன் பெண்ணுக்கு சிறை
உடல் நலமில்லாதபோது, படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக கொளுத்தும் வெயிலில் சிறுமியை நாய் போல கட்டிப்போட்டு கொலை செய்ததாக ஜேர்மன் பெண் மற்றும் அவரது கணவர் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அந்த பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Jennifer Wenisch (27) என்னும் பெண், ஐ.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்.
Jenniferஇன் கணவரான Taha al-Jumailly, யாஸிடி இனப்பெண் ஒருவரையும் அவரது மகளையும் விலைக்கு வாங்கி அடிமைகளாக தனது வீட்டில் வைத்துள்ளார்.
ஒரு நாள் அந்த சிறுமி தனது படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக Taha, அந்த சிறுமியை கொளுத்தும் வெயிலில் சங்கிலியால் கட்டி போட்டிருக்கிறார்.
அப்போது அந்த சிறுமி தாகத்தால் கதற, அவளுக்கு தண்ணீர் கூட குடிக்கக் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அந்த சிறுமியின் தாய் அவர்கள் காலில் விழுந்து கதறியபோது அவரை காலால் எட்டி உதைத்துள்ளார் Taha.
பின்னர் தம்பதியர் துருக்கியில் கைது செய்யப்பட்டு ஜேர்மனிக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.
வழக்கு விசாரணையில், போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், கணவர் அந்த சிறுமியை தண்ணீர் கொடுக்காமல் சாகவிட்டபோது உடனிருந்ததற்காகவும், Jenniferக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டத்தின்படி, போர்க்குற்றவாளிகள் எங்கு குற்றம் செய்திருந்தாலும், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் விசாரிக்கப்படலாம் என்பதால் Jennifer முனிச் நகரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள Jenniferஇன் கணவரான Tahaவுக்கு அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்லாமிய மத்திற்கு மாறி, ஐ எஸ் அமைப்பில் சேர்ந்த Jennifer, அந்த அமைப்பில் பெண்களின் உடைக் கட்டுப்பாடுகள், பொது இடத்தில் நடந்துகொள்ளும் முறை, மற்றும் மது மற்றும் புகையிலை பயன்பாட்டைத் தடுத்தல் ஆகிய பொறுப்புக்களை, AK-47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி முதலான ஆயுதங்கள் ஏந்தி கண்காணிக்கும் பொறுப்பை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.