இரயிலில் தனியாக சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி! கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அப்படியே குதித்த பரிதாபம்
இந்தியாவில் பெண் ஒருவர் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் இரயிலில் இருந்து குதித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் Mulanthuruthy இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட குருவாயூர்-புனலூர் எக்ஸ்பிரஸில் கடந்த புதன் கிழமை 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆலப்புழாவில் இருக்கும் தன்னுடைய வேலை செய்யும் இடத்திற்கு செல்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது அந்த இரயில் பெட்டியில், இன்னொரு நபரும், இந்த பெண்ணும் மட்டும் தனியாக இருப்பதை அறிந்த அந்த நபர், உடனடியாக இந்த பெண்ணை தாக்கி, அவரை இரயிலின் கழிவறைக்குள் இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் அணிந்திருந்த தங்கநகைகளையும் பறிக்க முயன்றுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக இரயில் பெட்டியின் கதவை திறந்து அப்படியே இரயில் சென்று கொண்டிருக்கும் போதே குதித்துள்ளார்.
இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அந்த பெண்ணிடம் அத்து மீறிய நபரின் பெயர் Bijukuttan என்பதும், அவர் ஆலப்புழாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நபர் மீது ஏற்கனவே தங்க நகை திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் இரயில்வே பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள அந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.