ஆசிய பெண்ணை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த அமெரிக்கர்! பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் ஆசிய பெண் ஒருவர் அமெரிக்கரால் சுரங்கப்பாதை ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் காலை 9.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அப்போது, டைம்ஸ் சதுக்கம் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஆசிய பெண்ணை அமெரிக்கர் ஒருவர் ரயிலின் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் நகர மேயரும் ஆளுநரும் சமீபத்தில் நகரத்தின் தெருக்களிலும் சுரங்கப்பாதை ரயில்களிலும் காவல்துறையை அதிகரிக்கும் திட்டங்களைக் கொண்டு வந்த நிலையிலும் இப்போது இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் இடத்துக்கு வந்த மேயர் Eric Adams, பொலிஸ் கமிஷனர் Keechant Sewell கூறுகையில், உயிரிழந்தவர் ஆசிய பெண் என்றும், அவரை தள்ளிவிட்டதாக நம்பப்பட்ட அந்த நபர் முதலில் அந்த இடத்தை விட்டு தப்பிய ஓடியதாகவும். ஆனால் சிறிது நேரத்தில் போக்குவரத்து பொலிஸாரிடம் வந்து சரணடைந்ததாகவும் கூறினர்.
பாதிக்கப்பட்ட பெண் Michelle Alyssa Go எனும் 40 வயது நியூயார்க் நகரவாசி என்றும், அவர் காலை 9:40 மணியளவில் தெற்கு நோக்கி R ரயிலுக்காகக் காத்திருந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இது வேண்டுமென்றே செய்யப்பட செயல் என்றும், பாதிக்கப்பட்ட பெண் அவரை தள்ளிவிட்ட நபருடன் எந்த தொடர்பும் கொண்டதாகத் தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் பெயர் வெளியிடப்படவில்லை, அனால் அவர் நியூயார்க் நகரத்தில் சாலையில் வசிக்கும் வீடற்ற நபர் என்றும், அவர் மீது பல குற்றவியல் வழக்குகள் இருப்பதாகவும், அவர் பரோலில் வந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.