லண்டன் விமானநிலையத்தில் வருங்கால மனைவியால் பிரித்தானியருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பல லட்சங்களுடன் தப்பியோட்டம்
லண்டன் விமான நிலையத்துக்கு வந்த திருமண நிச்சயதார்த்தம் முடிந்த ஜோடி.
ரோம் நகருக்கு சென்று திருமணம் செய்ய அவர்கள் முடிவெடுத்த நிலையில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி
லண்டன் விமான நிலையத்தில் நபர் ஒருவரை தவிக்கவிட்டு அவரின் வருங்கால மனைவி லட்சக்கணக்கான பணம், விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பித்து ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
40களில் உள்ள ஜோடிக்கு நேற்று முன் தினம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து ரோம் நகருக்கு சென்று திருமணம் செய்ய அவர்கள் முடிவெடுத்தனர்.
அப்போது பிரித்தானியரான அந்த ஆண் விமான நிலையத்தில் இருந்த கழிவறைக்கு சென்றார். அங்கிருந்து வெளியே வந்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கு தனது வருங்கால மனைவி ரூ.21,95,233.08 பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் அங்கிருந்து மாயமாகியிருந்தார்.
இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் எல்லா இடங்களிலும் தேடியும் அப்பெண் கிடைக்கவில்லை. சமீபத்தில் தான் அப்பெண்ணை சந்தித்து அவர் காதல் வயப்பட்டார் என தெரியவந்துள்ளது.
மாயமான பெண் வேறு நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டாரா எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.