லண்டனில் பெண் ஒருவரை தீவிரமாக தேடும் பொலிசார்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
லண்டனில் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயுள்ள 36 வயது பெண் தொடர்பில் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வடக்கு லண்டனின் ஹைகேட் நகரில் அமைந்துள்ள ஒரு மனநல காப்பகத்தில் இருந்து 36 வயதான Leonie Beatrice Gutmann என்பவர் தப்பியுள்ளார்.
நேற்று பிற்பகல் அவர் மாயமான பின்னர் இதுவரை காணப்படவில்லை என்றே நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. உளவியல் பாதிப்பு கொண்டவர் என்பதால் அவரது பாதுகாப்பு தொடர்பிலும் பொலிசார் கவலை தெரிவித்துள்ளனர்.
லண்டன் நகரில் எந்த பகுதியிலும் அவர் காணப்படலாம் என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், Camden மற்றும் Islington பகுதியில் அவர் அடிக்கடி சென்று வருபவர் எனவும், இதே பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் அவர் முன்னர் தங்கி இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள பொலிசார், பொதுமக்கள் அவரை அடையாளம் காண நேர்ந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.