ஜிம்...டயட் என 120 கிலோவில் இருந்து 47 கிலோ எடை குறைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!
32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் உடல் எடையை குறைப்பதற்காக மேற்கொண்டு வந்த சில கடினமான முயற்சிகள், அவருக்கே அது பல பிரச்சனைகளை கொடுத்துள்ளது.
Natalie Bradley என்ற 32 வயது பெண், தன்னுடைய எடையை குறைப்பதற்காக, வெறித்தனமாக பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். நாள் ஒன்றிற்கு இரண்டு முறை ஜிம்மிற்கு செல்வது, டயட்டிற்காக laxatives மற்றும் கோக் டயட் இருந்து வந்துள்ளார்.
இதில் அவர் நாள் ஒன்றிற்கு ஒரு முழு laxatives பெட்டியை விழுங்கும் அளவிற்கு அடிமையாக இருந்துள்ளார். இதன் காரணமாக அவரது இதயத்துடிப்பு சாதரண மட்டத்தில் இருந்து 30 முதல் 40-க்கு குறைய துவங்கியது. இதனால் அடிக்கடி அவர் மயங்கி விழுந்தார்.
ஜிம்மில் தன்னை எந்த அளவிற்கு அவர் கடினமாக்கிக் கொள்கிறாரோ, அந்த அளவிற்கு அவருடைய கலில் செப்சிஸ் ஏற்படலாம் என்று அவருடைய மருத்துவர் எச்சரித்துள்ளார்.
இது குறிட்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கடண்ட கடந்த 15 மாதங்களில் 120 கிலோ (19 stone) எடையில் இருந்து கிட்டத்தட்ட 47 (7.5Stone) கிலோவிற்கு சென்றுவிட்டேன் என்னால் ஒரு கட்டத்தில் நிற்க முடியவில்லை, நான் இதை தொடர்ந்திருந்தால் இறந்திருப்பேன்.
ஆரம்பத்தில் உடல் பருமன் அதிகமாக இருந்ததால், பல உடல்நல பிரச்சனைகளை சந்தித்தேன். இதனால் உடல் எடையை குறைக்க விரும்பினேன். இதற்காக நான் ஆரோக்கியமான, மென்மையான உடற்பயிற்சியை மேற்கொண்டேன்.
ஆனால், அதுவே நாளைடைவில் வெறித்தனமாக மாறியது. முதலில் என் எடை குறைந்த போது நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதிலும், இன்னும் அதிக அளவு எடை குறைந்த போது, அந்த மகிழ்ச்சிக்கு வார்த்தையே இல்லை.
அதுவே நாட்கள் செல்ல, என்னைப் பற்றி மோசமாக உணர ஆரம்பித்தேன். எவ்வளவு எடை குறைந்த போதிலும், அது எனக்கு போதுமானதாக உணரவில்லை.
இதனால் ஆடை SIZE 22 மற்றும் 24 அதன் பின் 4 மற்றும் 6 அளவுக்கு சென்றது. தன்னுடைய 16 வயதில் மன ஆரோக்கியம் மற்றும் எடையுடன் போராடுவது என அப்போதே மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சில காலம் கழித்துள்ளார்.
அதன் பின் மீண்டும் 2020-ஆம் ஆண்டு இந்த பிரச்சனைகள் காரணமாக சென்றுள்ளார். இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் முதல் பிரித்தானியாவில் ஊரடங்கு அமுலுக்கு வர அவருக்கு எல்லாமே மாறிவிட்டது.
ஏனெனில், எல்லாமே மாறிக் கொண்டிருந்தது. அவரால் திடீரென்று ஜிம்முக்கு செல்ல முடியவில்லை, நினைத்த அளவுக்கு laxatives வாங்க முடியாது, இதனால் அவரால் வெறித்தனமாக எடையை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் பயனாக இப்போது அவர் ஒரு ஆரோக்கியமான எடையுடன் உள்ளார். மேலும் அவர் சமூக சேவையாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன், தன்னை எவ்வாறு கையாள்வது மற்றும் கட்டுப்படுத்துவது என்பதை தனக்குத்தானே கற்பித்துக் கொண்டார்.
இந்த காலக்கட்டத்தில், பெண்களுக்காக பெண்கள் நடத்தும் தொண்டு நிறுவனம் ஒன்று அவருக்கு தொலைப்பேசி மூலம் ஆதரவு அளித்து வந்துள்ளது. இந்த தொண்டு நிறுவனத்தின் ஆதரவு மிகவும் விலைமதிப்பற்றது என்று கூறும் Natalie Bradley, இந்த தொற்று நோய் என்னைக் காப்பாற்றும் என்று நினைக்கவில்லை என்று கூறுகிறார்.
ஏனெனில் இந்த கொரோனா வரவில்லை என்றால், ஊரடங்கு வந்திருக்காது, இவரும் தொடர்ந்து தன்னுடைய வேலையை செய்திருப்பார். அது ஏதேனும் ஆபத்தில் சென்று முடிந்திருக்கும்.
எல்லாவே ஒரு அளவு தான், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு Natalie Bradley ஒரு சிறந்த எடுத்துகாட்டி, உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள, அளவான உடற்பயிற்சியே போதுமானது Natalie Bradley, இப்போது தன்னார்வு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஊரடங்கின் போது, எனக்கு உதவிய நபர்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன். மேலும், எதுவும் சாத்தியம் என்பதற்கு நான் ஒரு சான்று, உணவுக் கோளாறுகளுடன் போராடும் மற்றவர்களுக்கு என் கதை ஒரு உதாரணம், என்னால் அதைச் செய்ய முடிந்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
எனவே மீட்பு என்பது ஒரு சாத்தியமானது, அதை விட்டுவிடாதீர்கள், நான் என் மன ஆரோக்கியத்துடன் தினமும் போராடுகிறேன்.
நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியைச் தேவையில்லாமல் செலவு செய்துவிட்டேன். ஆனால், நான் வெட்கப்படவில்லை. நான் இன்னும் இங்கே இருக்கிறேன், உயிருடன் இருக்கிறேன், மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.