அசுர வேகத்தில் பாய்ந்த வாகனம்... அரைகுறை உடையில் தூக்கி வீசப்பட்ட பெண்: நடுக்கும் சம்பவம்
தமிழகத்தின் கோயம்புத்தூரில் வேகமாக பாய்ந்த வாகனத்தில் இருந்து அரைகுறை ஆடையில் பெண்ணின் சடம் ஒன்று தூக்கி வீசப்பட்ட சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில் அவினாசி சாலையில் திங்களன்று அதிகாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், குறித்த பெண்ணின் சடலத்தின் மீது மேலும் இரு வாகனங்கள் ஏறிச் சென்றதையும் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிந்துள்ள பொலிசார், இரண்டு குழுக்களை அமைத்துள்ளதுடன், குறித்தை பெண்ணை அடையாளம் காணும் நடவடிக்கையும் முன்னெடுத்துள்ளனர்.
பொலிசார் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை அதிகாலையில் அவினாசி சாலையில் பெண்ணின் சடலம் ஒன்றை போக்குவரத்து பொலிசார் கண்டெடுத்துள்ளதாகவும், பல வாகனங்கள் அந்த சாலை வழியே கடந்து சென்றுள்ள நிலையில், பெண்னின் முகம் மொத்தமாக சிதைந்துள்ளதும், அவர் அரைகுறை ஆடையில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சியில், அசுர வேகத்தில் பாய்ந்து சென்ற ஒரு SUV காரில் இருந்தே குறித்த பெண் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
மேலும், அடுத்த சில நிமிடங்களில் பாய்ந்து சென்ற இரு வாகனங்கள் அவர் மீது ஏறிச் சென்றுள்ளது. மட்டுமின்றி, ஒரு வாகனத்தில் இருந்து இருவர் வெளியே வந்து, குறித்த சடலத்தை பார்த்துவிட்டு, மீண்டும் அப்பகுதியை விட்டு சென்றுள்ளதாக கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
இது கொலையாக இருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர். மேலும், உடற்கூராய்வுக்கு பின்னர் விசாரணைக்கு உதவும் தகவல் ஏதும் கிடைக்கலாம் என்றே பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.