உன் சொந்த நாட்டிற்கு திரும்பி போ! லண்டன் பேருந்தில் பெண் பயணியிடம் மோசமாக பேசிய ஆண்... அதிர்ச்சி வீடியோ
லண்டன் பேருந்தில் கருப்பின பெண்ணொருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் கடந்த 9ஆம் திகதி நடந்துள்ளது. அன்றைய தினம் இரவு 9.20 மணியளவில் ஆண் பயணி ஒருவர் பேருந்தில் சிகரெட்டை பற்ற வைத்தார், அப்போது அங்கிருந்த பெண் பயணி ஏன் பேருந்தில் சிகரெட் பிடிக்கிறீர்கள் என தட்டி கேட்டார்.
இதையடுத்து உனக்கு பிடிக்கவில்லை என்றால், உன் சொந்த நாட்டிற்கு திரும்பி போ உள்ளிட்ட வார்த்தைகளை கூறிய ஆண் பயணி இனவெறியோடு பேசினார்.
இது தொடர்பாக 30 வயது ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்து பின்னர் விசாரணையின் கீழ் விடுவித்தனர், அவரிடம் மேலும் விசாரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக டிடெக்டிவ் கான்ஸ்டெபிள் ஆடம் ஜாக்சன் கூறுகையில், பாதிக்கப்பட்ட கருப்பின பெண்ணை நோக்கி கூறப்பட்ட வார்த்தைகள் அதிர்ச்சியளிக்கிறது, அதை ஏற்க முடியாது.
லண்டன் பேருந்திகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உணர அவர்களுக்கு முழு உரிமைகள் உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக யாருக்காவது தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம், அது விசாரணைக்கு உதவும் என தெரிவித்துள்ளனர்.