லண்டன் பூங்காவிற்கு அருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்! பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை
லண்டனில் பூங்காவிற்கு அருகில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Cator பூங்காவில் உள்ள Onespace Community மையத்திற்கு அருகில், நேற்று மாலை உள்ளூர் நேரப்படி சரியாக 5.30 மணிக்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
கண்டுபிடிக்கப்பட்ட பெண் குறித்து சில தகவல்கள் தெரிந்தாலும், ஆனால் அது குறித்து இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து, இன்னும் குடும்பத்தினருக்கு தெரிவிக்காத காரணத்தினால், அடையாளம் அறியப்படவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தை பிரேதபரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாக, இரவு 9.20 மணிக்கு சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும், பெருநகர காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. யாரேனும் இது குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக பொலிசாரை அழைக்கலாம், அது ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.