மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை! உயிர்தப்பிய மற்றொரு மகள்..அதிர்ச்சி சம்பவம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் பெண்ணொருவர் தனது மகள்களை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவனை இழந்த பெண்
கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள கொடியல்குத்து பகுதியைச் சேர்ந்தவர் விஜயா(33). இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.
இதனால் தனது 12 வயது மற்றும் 4 வயது மகள்கள்களுடன் விஜயா வசித்து வந்தார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்த அவர், இரு மகள்களை வளர்க்க முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை முடிவு
இந்த நிலையில் நேற்றைய தினம் விஜயா தன் இரு மகள்களையும் ஒரே கயிற்றில் இறுக்கி தூக்கில் தொங்கவிட்டார். மேலும் அவரும் தூக்குப்போட்டு தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
மூத்த மகள் டிவி மேசையின் ஓரத்தில் கால் வைத்து உயிர் தப்பியுள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். விரைந்து வந்த சிலர் விஜயா மற்றும் இளைய மகள் சோபிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிதாபமாக உயிரிழப்பு
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கொடியல் குத்து பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.