டிக்டோக்கில் விவாகரத்து பற்றி பேசிய பெண்: முன்னாள் கணவனால் நடந்த கொடூரம்
விவாகரத்து பற்றி டிக்டோக்கில் வெளிப்படையாகப் பேசிய சிகாகோ பெண் ஒருவர் அவரது முன்னாள் கணவரால் அவரது குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குறித்த நபரும் இச்சம்பவத்தை அடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜார்ஜியாவில் உள்ள தமது வீட்டில் இருந்து ஸ்ட்ரீடர்வில்லில் உள்ள தனது முன்னாள் மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுடன் 36 வயதான ரஹீல் அகமது சென்றதாக கூறப்படுகிறது.
திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் சுமார் 4.30 மணியளவில் சானியா கான் என்பவரது குடியிருப்புக்கு விசாரணை நிமித்தம் பொலிசார் சென்றுள்ளனர்.
ரஹீல் அகமது திடீரென்று மாயமானதாக குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரிலேயே சானியா கானின் குடியிருப்புக்கு பொலிசார் சென்றுள்ளனர். பொலிசார் வந்துள்ளதை அறிந்துகொண்ட ரஹீல் அகமது, சத்தமாக கத்தியவாறே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், ரஹீல் அகமது மற்றும் 29 வயதான சானியா கான் தம்பதி விவாகரத்து பெறும் சூழலில் இருந்துள்ளனர். இன்னும் இரு மாதங்களில் விவாகரத்து விவகாரம் முடிவுக்கு வரும் என்றே கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே சானியா கான் விவாகரத்து பற்றி டிக்டோக்கில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இதனிடையே, குடியிருப்புக்குள் நுழைந்த பொலிசார், பின்னந்தலையில் சுடப்பட்ட நிலையில் சானியா கானை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், ரஹீல் அமது தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்த நிலையில், படுக்கையறை ஒன்றில் காணப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் சிகாகோ பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.