தற்கொலை செய்துகொண்டதாக கருதப்பட்ட பெண்... ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கணவன் கூறிய உண்மை
அமெரிக்காவில் 2015ஆம் ஆண்டு சட்டத்தரணி ஒருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதலில் பொலிசார் கருதினார்கள்.
Susan Winters (48) என்ற அந்த பெண் உடலில், உறைதலைத் தடுக்க பயன்படும் ஒரு ரசாயனமும், வலியைக் குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனமும் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் அந்த ரசாயனங்களை அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் கருதினர்.
ஆனால், Susan குடும்பத்தினர், அது தற்கொலை அல்ல என்று கூறி, உண்மையைக் கண்டுபிடிக்க தனியார் துப்பறிவாளர்களை ஏற்பாடு செய்தனர்.
அப்போது பல உண்மைகள் தெரியவந்தன. அந்த நேரத்தில் Susanக்கும் அவரது கணவரான Gregory 'Brent' Dennis Henderson (59)க்கும் இடையில் பிரச்சினைகள் இருந்ததும், இருவரும் பிரியும் நிலையில் இருந்ததும், Gregory போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், Susanக்கு காலை 5.15க்கு அந்த ரசாயனம் கொடுக்கப்பட்டதும், ஆனால், அதற்கு முன்பே அவர் சுயநினைவிழந்து கிட்டத்தட்ட மரணத் தருவாயிலிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
எல்லாவற்றிற்கும் மேல், Susan ஒரு மில்லியன் டொலர்கள் ஆயுள் காப்பீடு எடுத்திருந்ததும், அவர் உயிரிழந்தால், அந்த தொகை அவரது கணவரான Gregoryக்கு கிடைக்கும் என்பதும் தெரியவந்தது.
இந்த விடயங்கள் வெளியானதைத் தொடர்ந்து பொலிசார் மீண்டும் வழக்கை கையில் எடுத்து விசாரிக்க, 2017ஆம் ஆண்டு Gregory மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
Gregory ஒரு மன நல மருத்துவர் ஆவார். விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், நேற்று, Gregory கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, போதைக்கு அடிமையான Gregory, போதைப்பொருள் வாங்குவதற்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக, தன் மனைவியின் காப்பீட்டுத்தொகைக்காக அவரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.