லண்டன் விமான நிலையத்தில் சிக்கிய பெண்: பெட்டியை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
லண்டனில் இருந்து ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்திற்கு 5 மில்லியன் பவுண்டுகள் கடத்திய வழக்கில் பெண் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லவிருந்த 30 வயதான Tara Hanlon என்பவரது பெட்டியை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
அதில் கணக்கில் வராத 1.9 மில்லியன் பவுண்டுகள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மோப்ப நாய்களால் கண்டுபிடிக்க முடியாதபடி, பணம் நிரப்பிய பைகளுக்கு காப்பி வாசனை வரும்வகையில் செய்திருந்தார்.
மட்டுமின்றி, அதிக எண்னிக்கையிலான பெட்டி எடுத்துச் செல்வதை, எந்த உடை உடுத்த வேண்டும் என்ற குழப்பம் இருப்பதாலையே அதிக பெட்டிகள் கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இதற்கு முன்னரும் 3.5 மில்லியன் பவுண்டுகளை இவர் திருட்டுத்தனமாக துபாய் மாகாணத்திற்கு எடுத்துச் சென்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஒவ்வொரு தடவையும் பணம் எடுத்துச் செல்ல இவருக்கு வெறும் 3,000 பவுண்டுகள் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.