அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் ஒரு கோடி பரிசு வென்ற பெண்! 12ஆம் வகுப்பு மட்டுமே படித்தவருக்கு குவியும் பாராட்டு
கவிதா சாவ்லா7.5 கோடி பரிசு தொகையை வெல்வாரா என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆமீர்கான், மேரி கோம், சுனில் சேத்ரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் குரோர்பதி நிகழ்ச்சியில் பெண்ணொருவர் ஒரு கோடி பரிசு வென்றுள்ளார். பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கோன் பனேகா குரோர்பதி என்ற Quiz நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு போட்டியாளர் சரியான பதிலை கூறினால் கோடிக்கணக்கான பரிசை வெல்வார். இந்த நிலையில் தற்போது நடந்து வரும் சீஸனின் முதல் எபிசோடில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் கோலாப்பூரைச் சேர்ந்த கவிதா சாவ்லா என்ற பெண் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலை கூறிய அவர், முதல் முறையாக ரூ.1 கோடி பரிசு தொகையை வென்று சாதித்திருக்கிறார்.
12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கவிதா சாவ்லா, குடும்பத் தலைவியாக இருக்கிறார். பட்டம் படித்தவர்களே கேள்விகளுக்கு தடுமாறும் நிலையில், கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்து கவிதா மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
இதுவரை ஒரு கோடி வென்றுள்ள கவிதா சாவ்லா, அடுத்த கேள்விக்கு கவிதா சரியாக பதில் கூறினால் ரூ.7.5 கோடி பரிசு தொகையை வெல்வார்.