லண்டனில் சிகிச்சையளித்த ஆண் மருத்துவரிடம் பாலியல் தாக்குதல் நடத்திய பெண்! நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு
லண்டனில் ஆம்புலன்ஸில் ஆண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்டதற்காக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.
தீபா மேகனி (33) என்ற பெண் வீட்டில் இருந்து கடந்தாண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி அவசர உதவி எண்ணுக்கு போன் வந்தது.
இதையடுத்து இரண்டு துணை மருத்துவர்கள் ஆம்புலன்ஸுடன் அங்கு வந்து தீபாவை அதில் ஏற்றி கொண்டனர்.
பின்னர் ஆம்புலன்ஸில் தீபாவுக்கு சிகிச்சையளித்த போது ஒரு ஆண் மருத்துவரிடம் அநாகரீகமான முறையில் பாலியல் தாக்குதலை தீபா நடத்தியுள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் கைதான தீபா சில தினங்களுக்கு முன்னர் வில்லிஸ்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அங்கு மாஸ்க் அணிந்து தனது முகத்தை மூடியிருந்த தீபா தனது பிறந்ததிகதி, வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்களை கொடுத்துவிட்டு தன் மீதான குற்றத்தை மறுத்தார்.
இந்த நிலையில் தீபாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அவர் மே 18ஆம் திகதி ஹாரோய் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.