பெண்களே மாதவிடாய் வலி தாங்க முடியலையா? கவலை வேண்டாம்..இதோ சில எளிய மருத்துவங்கள்
பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் என்பதே ஒரு வித அசெளகரியமான நிலை தான்.
இந்நிலையில், மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பையும் சிலருக்கு அதிகமாக உண்டாக்கும். மாதவிடாய் வரும்போது வரும் வலிக்கு Dysmenorrhoea என்று பெயர்.
இதனால் அன்றாட வாழ்வின் செயல்கள் பாதிக்கப்படும். அது தசைப்பிடிப்பு போல இருக்கும். கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் வலி அதிகமாக இருக்கும். அடி வயிற்றிலேயே, தொப்புளுக்குக் கீழே வலி காணப்படும்.
இந்த வலி காலுக்கும், முதுகுக்கும் பரவலாம். இதனால் பெரும் அவஸ்தைக்குள்ளாகுவதுண்டு. இதனை எளியமுறையில் ஒரு சில வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம்.
Photo Credit: Getty Images
- புதினா இலைகள் சிலவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். புதினாவை சாறாக பிழிந்து அருந்தினாலும் மாதவிடாய் வலி குறையும்.
- ஏலக்காய்கள் சிலவற்றை நன்கு பொடி செய்து கொண்டு பசும்பாலில் கலந்து அருந்தி வர மாதவிடாய் கால வலி குறையும். இந்த ஏலக்காய்களை அவ்வப்போது பச்சையாக வாயில் போட்டு மெல்லுவதும் சிறந்த நிவாரணத்தை கொடுக்கும்.
- இஞ்சியை சிறிது எடுத்து நீரில் போட்டு காய்ச்சி, அதை வலி மிகுந்த நேரங்களில் அவ்வப்போது சிறிது பருகி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் இதை அதிகம் பருக கூடாது.
- முட்டைகோஸ், வெள்ளரிக்காய், முள்ளங்கி, தர்பூசணி ஆப்பிள் போன்ற காய்கள் மற்றும் பழங்களை இக்காலங்களில் உண்பது மாதவிடாய் வலியினை குறைக்கும்.
- ஆக்ரூட், பாதம், பிஸ்தா போன்ற பருப்புகள் பல அத்தியாவசிய சத்துக்களை கொண்டது இவற்றை உண்பதால் மாதவிடாய் வலியை குறைக்கும்.
- விளக்கெண்ணெய் உஷ்ணத்தை போக்கி குளிர்ச்சியை தர வல்லது. இந்த விளக்கெண்ணையை சிறிது எடுத்து கொண்டு தொப்புள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேய்த்து வர சூதக வலி எனப்படும் மாதவிடாய் வலி குறையும்.