திருட்டு பட்டம் கட்டப்பட்ட பெண்ணை ரூ 42 கோடிக்கு அதிபதியாக்கிய அவர் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு!
அமெரிக்காவில் உள்ள Walmart கடையில் திருடியதாக பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணை, அந்த குற்றச்சாட்டே பெரிய கோடீஸ்வராக ஆக்கியுள்ளது.
அலபாமாவை சேர்ந்த பெண்ணொருவர் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த 2016ல் Walmart கடையில் $48 மதிப்புள்ள பொருட்களை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும் $200 செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்டார். கடையின் சுய சேவையைப் பயன்படுத்துவதாக நர்ஸ் கூறினார். ஆனால் மற்ற கடை ஊழியர்கள் அவளை நம்ப மறுத்து, அவள் கடையில் திருடுவதாகக் கூறினர்.
இதன் விளைவாக, நர்ஸ் கைது செய்யப்பட்டார். ஆனால் தான் பொருட்களை திருடவில்லை எனவும் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுத்ததாக அவர் கூறி நீதிமன்றத்தில் எதிர் வழக்கு தொடர்ந்தார்.
சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்குப் பிறகு செவிலியர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. ஆனால் தனக்கு நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தார் நர்ஸ். இதில் அவர் தற்போது வெற்றியும் பெற்றுள்ளார்.
அதன்படி, நீதிமன்ற உத்தரவின்படி நர்ஸுக்கு $2.1 மில்லியன் (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 42 கோடி) வழங்கப்பட்டுள்ளது.