என்னை கடத்தி சென்று துஷ்பிரயோகம் செய்தான்! புகார் அளித்த அழகிய இளம்பெண்.. விசாரணையில் தெரிந்த உண்மை
அமெரிக்காவில் தன்னை மர்ம நபர் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பொய் புகார் கூறிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
மிச்சிகனின் ஓட்சிகோ கவுண்டியை சேர்ந்தவர் அபிகைல் அர்சினால்ட் (19). அழகிய இளம்பெண்ணான இவர் சமீபத்தில் அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து என்னை துப்பாக்கி முனையில் யாரோ கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறியிருக்கிறார்.
மேலும் கடத்திய நபரிடம் இருந்து தான் தப்பித்து வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து குற்றவாளியை பிடிக்க பொலிசார் அபிகைலிடம் தீவிர விசாரணை நடத்தினார்.
அப்போது தான் அபிகைலை யாருமே கடத்தவில்லை எனவும் அவர் கூறியது அனைத்தும் பொய் எனவும் தெரியவந்தது.
இந்த உண்மையை அறிந்து பொலிசார் அதிர்ந்து போனார்கள். இதையடுத்து பொய்யான தகவலை வெளியிட்ட குற்றச்சாட்டிற்காக அபிகைலை பொலிசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் $10,000 ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து அடுத்த மாதம் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் அபிகைல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.