விவரம் அறியாத 16 வயதில் திருமணம் செய்து கொண்ட ஜோடி! 18 வயது உயிரிழந்த மனைவி
தமிழகத்தில் விவரம் அறியாத வயதில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்ட நிலையில் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன் - உமாதேவி தம்பதி 16 வயதாக இருக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால், போக்சோ சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பின்னர், உமாதேவிக்கு 18 வயதான பின்னர் இரு வீட்டாரும் சேர்ந்து பேசி காதல் ஜோடியை சேர்த்து வைத்துள்ளனர்.
தொடர்ந்து, 5 மாதங்களுக்கு முன்பு மதுரையில் குடியேறியுள்ளனர். இந்த நிலையில், சில தினங்களாக தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால், மன வேதனையடைந்த உமாதேவி கணவர் உறங்கிக் கொண்டிருந்த போது தூக்கு மாட்டி கொண்டு இறந்து போனார். பால கிருஷ்ணன் கண் விழித்து பார்த்த போது, மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வேதனையில் தன் கழுத்தில் உளியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அலறம் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.