அடுத்த சில நிமிடத்தில் உயிரிழக்க போவதை அறியாமல் தனது புகைப்படத்தை வெளியிட்ட பெண் மருத்துவர்! பதைபதைக்க வைக்கும் வீடியோ
இந்தியாவில் சுற்றுலா சென்ற பெண் மருத்துவர் அங்கு புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவிட்ட அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அப்பகுதியின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் கின்னார் மாவட்டத்தின் சங்லா-சிட்குல் சாலை அருகே நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, அப்பகுதி வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் டெம்போ வாகனத்தின் மீது பெரிய கற்பாறைகள் விழுந்ததில், சுற்றுலாப் பயணிகள் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த 9 பேரில் ஒருவர் தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 37 வயதான தீபா சர்மா என்ற பெண் மருத்துவர். சுற்றுலா சென்ற இடத்தில் நின்றவாறு தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றிய ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்திருந்தார்.
Standing at the last point of India where civilians are allowed. Beyond this point around 80 kms ahead we have border with Tibet whom china has occupied illegally. pic.twitter.com/lQX6Ma41mG
— Dr.Deepa Sharma (@deepadoc) July 25, 2021
அதில், இந்தியாவின் கடைக்கோடி எல்லையில் நின்று கொண்டிருக்கிறேன். இந்த எல்லையைத் தாண்டி சுமார் 80 கிலோ மீட்டரில் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திபெத் எல்லை உள்ளது என்று கூறியிருந்தார்.
ஆனால், அப்போது தீபாவிற்கு தெரியாது அடுத்த சில நிமிடங்களில் அவரின் உயிர் பிரியப்போகிறது என்று. பின், சிறிது நேரத்தில் மதியம் 1.25 மணி அளவில் கடும் மழையால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் கின்னார் மாவட்டத்தில் சிட்குலாவிலிருந்து சங்லா வரை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு டெம்போ வாகனம் மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் ஒரு பாலம் முழுமையாக இடிந்து விழுவதும், கற்பாறைகள் கீழ்நோக்கி உருண்டு செல்வதையும் காணமுடிகிறது.
#WATCH | Himachal Pradesh: Boulders roll downhill due to landslide in Kinnaur district resulting in bridge collapse; vehicles damaged pic.twitter.com/AfBvRgSxn0
— ANI (@ANI) July 25, 2021
உயிரிழந்த தீபா சர்மா ஒரு ஆயுர்வேத பயிற்சியாளரும், மருத்துவ ஊட்டச்சத்து நிபுணரும் எழுத்தாளரும் ஆவார். சமூக வலைதளங்களில் பல மடங்கு பின்தொடர்வோரை வைத்திருப்பவர். புகைப்படம் எடுப்பது, பயணம் செய்வது மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பது போன்றவற்றை விரும்புவதாக அவரது தனிப்பட்ட வலைத்தளம் மூலம் தெரிய வருகிறது.
நிலச்சரிவில் தனது உயிரை இழப்பதற்கு முந்தைய நாள், இயற்கை இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே இல்லை என்ற தலைப்பிட்டு மலைகள் சூழ தன்னைப் பற்றிய ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்திருந்தார்.
இதனிடையே, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ .50 ஆயிரம் உதவித் தொகையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Life is nothing without mother nature. ❤️ pic.twitter.com/5URLVYJ6oJ
— Dr.Deepa Sharma (@deepadoc) July 24, 2021