நீ ஏன் என் மனைவிக்கு பணம் கொடுக்க வேண்டும்? கொந்தளித்த தாமரை

Women Thamarai
By Fathima Mar 21, 2022 06:06 AM GMT
Report
Courtesy: samayam

இல்லத்தரசிகளுக்கு விரைவில் மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பாடலாசிரியை தாமரை கூறியிருப்பதாவது,

இல்லத்தரசிகளுக்கு 1000/- மாத உதவி

தேவையில்லாத ஒன்று !

நீண்ட நாட்களாக எழுத நினைத்திருந்த இந்தக் கருத்தை, இனிமேலும் தள்ளிப் போடக் கூடாது என்றே இப்போது எழுதுகிறேன். நேரமின்மையால் சுருக்கமாக !

வெளிவேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து தன் வீட்டு வேலைகளை, தன் குழந்தைகளை மட்டுமே பார்த்துக் கொள்ளும், கணவனின் ஊதியத்தை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'இல்லத்தரசி'களுக்கு 1000/- மாத உதவி தருவதாக சிலகாலமாக அரசியல் கட்சிகள் பேசி வருகின்றன.

மக்கள் நீதி மையம்தான் முதன்முதலாக தேர்தல் வாக்குறுதியாக/ அறிக்கையாகக் கொடுத்தது என்று நினைக்கிறேன். அப்போதே நினைத்தேன், இதென்ன மடத்தனம், தத்தம் குடும்பங்களைக் கவனித்துக் கொண்டு வீட்டிலிருக்கும் பெண்களுக்கு எதற்காக அரசாங்கம் உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்று !.

வீட்டுத்தலைவிகள் வீட்டுக்காக 'மாடு மாதிரி' உழைக்கிறார்கள், குழந்தைகளைப் பேணி வளர்க்கிறார்கள், ஆனால் எந்த ஊதியமும் அற்று - ஒருவேளை கணவனால் கைவிடப்பட்டால் நிர்க்கதியாக நின்று - உழைப்புச் சுரண்டல் செய்யப் படுகிறார்கள் என்பது உண்மைதான் !.

இத்தகைய பெண்களின் நிலை அவலமானதுதான் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில், எப்போதும் ஆணின் இரக்கத்தை எதிர்பார்த்து, அவன் என்ன கொடுமை செய்தாலும் அடங்கிப் போயேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒருவேளை அவன் விட்டுவிட்டுப் போனாலோ, திருமணம் தாண்டிய வேறு உறவு ஏற்படுத்திக் கொண்டாலோ இவர்கள் செய்யக் கூடியது ஒன்றுமில்லை - கண்ணைக் கசக்குவதைத் தவிர !

ஆனால் குடும்பத்தில் இருக்கும்போதே இவர்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு வழங்குவது எப்படி அரசாங்கத்தின் பொறுப்பாகும் ? கைவிடப்பட்டோருக்கு, அபலைகளுக்கு, கைம்பெண்களுக்கு வேறுவகைத் திட்டங்கள் அரசாங்கத்தில் உள்ளன. அவை சரியான நோக்கத்தில் செயல்படுகின்றன.

தன் வீட்டில் தனக்காக, தன் குழந்தைகளுக்காக, தன் குடும்பத்துக்காக உழைக்கும் மனைவிக்கு ஊதியம் தர வேண்டியது அந்த உழைப்பின் பலனை அனுபவிக்கும் கணவனது பொறுப்பு ! அரசாங்கம் எதற்காகக் கொடுக்க வேண்டும் ???? 

ஏற்கனவே, இத்தகைய பெண்களுக்காகத் தன் மாதவூதியத்தில் சிறு பகுதியைக் கணவன் ஒதுக்க வேண்டும் என்கிற திட்டம் பெண்கள் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டார்கள் - குடும்பத்தைப் பிரிக்கிறார்கள், பிளக்கிறார்கள், தன் குடும்பத்திற்கு உழைப்பதற்குப் பெண்களுக்கு எதற்கு ஊதியம்? என்றெல்லாம் எதிர்ப்பு வலுவாக எழுந்தது.

ஆனால் அதையே அரசாங்கம் கொடுக்கிறேன் என்று சொன்னால், 'நீ எதற்காக என் மனைவிக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் ?' என்று ஓர் எதிர்ப்புக் குரல்கூட வரவில்லையே, எப்படி ???

இந்த வேலைகளுக்காக ஒரு பணிப்பெண்ணை அமர்த்தினால் பலமடங்கு ஊதியம் கொடுக்க வேண்டி வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று !. ஊதியமில்லா உழைப்பாளியாக இல்லத்தரசி சுரண்டப்படுகிறார் என்பது நடப்பு நிலை !.

இந்த சிக்கலை வேறுவகையில்தான் எதிர்கொண்டாக வேண்டுமேயொழிய அரசாங்கம் உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்பது தவறான கருத்து !.  

வீட்டுவேலையும் செய்துகொண்டு வெளிவேலைக்கும் போய்வரும் பெண்களின் நிலையை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமில்லையா ? அவர்களெல்லாம் முட்டாள்களா ? அவர்களுக்கும் அரசாங்கம் பரிவுத்தொகை ஏதேனும் கொடுக்குமா ?

இன்னும் ஒருபடி மேலே போய், வேலைவெட்டியில்லாத ஆணுக்கு, வெளியே உழைத்து சோறும் போட்டு வீட்டுவேலையும் செய்து மாளும் தெய்வப்பிறவிகளை எந்தக் கணக்கில் சேர்க்க ???

சரியாகச் சொன்னால், இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுவேலை போக, மற்றுமொரு பணியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லையே ! வெளியே அலுவலகப்பணிக்குதான் போகவேண்டும் என்பதில்லையே !.

தங்கள் தனித்திறனுக்கேற்ப - தையல், பிறர்குழந்தைபார்த்தல், தின்பண்டங்கள் செய்து தருதல், பாடம் சொல்லித்தருதல் - நூற்றுக்கணக்கான தெரிவுகள் உள்ளனவே! ஏதேனுமொன்றைச் செய்து கௌரவமாகப் பொருளீட்ட இயலுமே !

அதென்னது, அரசாங்கத்திடமிருந்து 'இலவசமாக' உதவி எதிர்பார்ப்பது ????

வெளிவேலைக்குச் செல்லும் இலட்சக்கணக்கான பெண்களின் வரிப்பணத்திலிருந்துதான் இதைச் சுரண்ட வேண்டும் !

நான் இதைச் சற்றும் ஆதரிக்கவில்லை. தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

இதைச் சொல்வதால் எனக்கு எதிர்ப்பு எழும் என்று தெரிந்தேதான் சொல்கிறேன்.

தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் : இந்த-இல்லத்தரசி- இலவச-மாதாந்திர-1000/- திட்டத்தைக் கைவிடுக !

ஒருவேளை இதைச் செயல்படுத்தித்தான் தீர வேண்டுமெனில், அந்த 1000/- க்கு ஈடான உழைப்பை அவர்களிடமிருந்து பெற்று விட்டு வழங்குக !

( அரசாங்கத்தின் உபரி வேலைகளுக்கா பஞ்சம் ? தங்கள் பகுதியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, அம்மா உணவக வேலைகள், சிறார் பள்ளி வேலைகள்...இப்படி இன்னும் பல )!.

#இல்லத்தரசிஉதவித்தொகைத் திட்டம் தவறானது!

#StopHouseWifeFreebieScheme

பி.கு :

1. நேரமின்மை காரணமாக, அனைத்து வாதங்களையும் வைத்து சீர்தூக்கி எழுதவில்லை. சாரத்தை மட்டுமே எழுதியுள்ளேன்.

2. பெண்களுக்கு இலவச பேருந்துப்பயணம், கல்லூரி படிக்கும்வரை குழந்தைகளுக்கு மாதம் 1000/- உள்ளிட்ட திட்டங்களைக் கைதட்டி வரவேற்கிறேன். அதற்காக அரசாங்கத்துக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் என் பாராட்டும் வாழ்த்தும்

2. விருப்பமுள்ளவர்கள், ஒத்த கருத்துடையவர்கள் பகிரலாம் என தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US