சாலையில் கிடந்த பர்ஸில் இருந்த ஆயிரக்கணக்கிலான பணம்! அதை எடுத்த பெண் செய்த செயல்... குவியும் பாராட்டு
தமிழகத்தில் கீழே கிடந்த ரூ 58 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை ஏழை பெண் பொலிசில் நேர்மையாக ஒப்படைத்துள்ளார்.
அம்பாசமுத்திரம் அருகே மாரியம்மாள் என்ற பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கீழே கிடந்த பர்சை திறந்து பார்த்த போது உள்ளே 58 ஆயிரத்து 210 ரூபாய் பணம் மற்றும் ஆண்ட்ராய்ட் செல்போன் கிடைத்துள்ளது.
அதையெல்லாம் தான் எடுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட மாரியம்மாளுக்கு தோன்றவில்லை.
பின்னர் நேராக பொருட்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் பொருட்களை உரிமையாளரிடம் பொலிசார் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து நேர்மையின் உருவமாக திகழ்ந்த மாரியம்மாளை பாராட்டிய பொலிசார் அவருக்கு குத்து விளைக்கை பரிசாக வழங்கி கெளரவப்படுத்தினார்கள்.