கிராமத்தில் காலையில் தூங்கி எழுந்து வீட்டின் பின்புறம் சென்ற பெண்! அங்கு நொடி பொழுதில் நடந்த பதறவைக்கும் சம்பவம்
தமிழகத்தில் திருமணமான பெண் தீக்குளித்து தறகொலை செய்து கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மனைவி தங்கம்மாள் (42). இவருக்கு கடந்த ஒரு மாத காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலையில் தூங்கி எழுந்த தங்கம்மாள் வீட்டின் பின்புறம் திடீரென சென்றுள்ளார். பின்னர் நொடிபொழுதில் அங்கிருந்த மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
தங்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.