பேஸ்புக்கில் வந்த முன்னாள் காதலி.. கூலிப்படையால் நடந்த கொலை.. அதிர்ச்சி பின்னணி
பேஸ்புக் மூலம் முன்னாள் காதலர் தேவர்துவை ஆசிரியை நிகிதா தொடர்பு கொண்டுள்ளார்
கணவரின் காதலை அறிந்த பிரியங்கா பள்ளிக்கே சென்று நிகிதாவுடன் சண்டையிட்டுள்ளார்
இந்தியாவின் மும்பை நகரில் ஆசிரியை ஒருவர் தனது முன்னாள் காதலனின் மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தேவர்து சிங்(33) என்பவருக்கும், பன்வெல் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா ராவத்திற்கும்(30) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் பேஸ்புக் மூலம் தேவர்துவின் முன்னாள் காதலியான நிகிதா (32) தொடர்பு கொண்டுள்ளார். இருவரும் தங்கள் பழைய காதல் குறித்து பேசி வந்துள்ளனர். நாளடைவில் மீண்டும் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
நிகிதாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், முன்னாள் காதலரை நேரில் சந்தித்து பழகி வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பிரியங்கா ராவத்திற்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
Priyanka Rawat
மேலும் நிகிதா ஆசிரியையாக பணியாற்றும் பள்ளிக்கு சென்ற பிரியங்கா அவருடன் தகராறு செய்துள்ளார். இதன் காரணமாக தேவர்து மற்றும் நிகிதா பேசிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். எனினும் காதலரை மறக்க முடியாத நிகிதா, அவரது மனைவி பிரியங்காவை கொலை செய்ய திட்டமிட்டு, அதற்காக கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். தேவர்துவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி பன்வெல் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பிரியங்காவை, கூலிப்படையினர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், நிகிதா மற்றும் தேவர்து ஆகிய இருவரையும் கைது செய்தனர்.