2 ஆண்டுகளாக குழந்தைகளுடன் கழிப்பறையில் வசித்து வரும் பெண்! கண்கலங்க வைக்கும் வீடியோ
இந்தியாவில் பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக தனது குழந்தைகளுடன் கழிப்பறையில் வசித்து வரும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள மஹாபூப்நகர் பகுதியில் வசிப்பவர் சுஜாதா. இவரது கணவர் கூலி வேலை செய்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக சுஜாதாவின் வீடு இடிந்து விழுந்துள்ளது. இதனால் அவரது வீட்டின் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாருடன் சுஜாதா தங்கியுள்ளார்.
பின்னர் அவர்களை சமுதாய கூடத்தில் இருந்து வெளியேற கூறியுள்ளனர். இதனால் அதே பகுதியில் உள்ள அரசு பொது கழிப்பறையை சுஜாதா வீடாக மாற்றி 2 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருகிறார்.
#ToiletEkGharKiKatha: 30-yr-old Sujatha removes a stone slab to show where she cooks so her family of four can eat: on top of an Indian commode inside a toilet which serves as home for the #ScheduledCaste family in #Tirumalagiri #Jadcherla #Mahbubnagar #Telangana @ndtv @ndtvindia pic.twitter.com/obY5fFTJBg
— Uma Sudhir (@umasudhir) September 21, 2021
மேலும் அந்த கழிப்பறையில் சமையல் கேஸ் சிலிண்டர், அடுப்பு போன்ற பொருள்களையும் வைத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவத்தை அறிந்த பஞ்சாயத்து நிர்வாகம் கழிப்பறைக்கு அருகே சுஜாதாவுக்கு வீடு கட்டி தருவதாக தெரிவித்துள்ளனர்.
இரண்டு வருடங்களாக 2 குழந்தை மற்றும் மாமியாருடன் பெண் ஒருவர் கழிப்பறையில் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.