ஐசியூ-வில் உயிருக்கு போராடிய கணவன்! மனைவி மீது கை வைத்து தவறாக நடந்து கொண்ட மருத்துவர்? நாட்டை உலுக்கிய சம்பவத்தில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்
இந்தியாவின் பீகாரில் கொரோனா பாதித்த கணவரை மருத்துவமனையில் சேர்த்த மனைவியிடம் தவறாக நடந்து கொண்டது ஊழியர் என கூறப்பட்ட நிலையில் மருத்துவர் ஒருவரே அவரிடம் மோசமாக நடந்து கொண்டாரா என விசாரணை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றி வந்தவர் ரவுஷன் சந்திரா. இவர் தனது மனைவி ருச்சியுடன் கடந்த மார்ச் மாதம் சொந்த ஊரான பீகாருக்கு வந்தார்.
அங்கு ரவுஷனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மனைவி ருச்சி அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சரியான சிகிச்சையை அளிக்காததால் ரவுஷன் உயிரிழந்தார்.
மேலும் சில மருத்துவ ஊழியர்கள் ருச்சியின் உடையை பிடித்து இழுத்தும், அவர் இடுப்பில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஜோதி குமார் என்ற வார்ட் பாயை பொலிசார் கைது செய்தனர். இந்த நிலையில் அதிகாரபூர்வமாக சில பேர் மீது ருச்சி நேற்று எப் ஐ ஆர் பதிவு செய்திருக்கிறார்.
அதில் முக்கியமாக ஐசியூவில் இரவு பணியில் இருந்த அகிலேஷ் என்பவர் தன் மீது கை வைத்து அநாகரீகமாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அகிலேஷின் செயல்களை பல்லை கடித்து கொண்டு பொறுத்து கொண்டதாகவும், ஏனெனில் உயிருக்கு போராடும் கணவருக்காக அப்படி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அகிலேஷ் மருத்துவரா என்ற சந்தேகம் பொலிசாருக்கு எழுந்துள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கீழ் நிலை ஊழியர்கள் மட்டுமே ருச்சியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் மருத்துவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.