அழகான வசதிபடைத்த ஆண்களை மயக்கி திருமணம் செய்து வந்த 30 வயது பெண் பொலிஸ்! மொத்தம் எத்தனை பேர்? அதிர்ச்சி பின்னணி
இந்தியாவில் தனியாக வசிக்கும் அழகான வசதிபடைத்த வாலிபர்களை மயக்கி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் பணம் பறித்து வந்த இளம்பெண்ணான பெண் பொலிஸ் வசமாக சிக்கியுள்ளார்.
ஐதராபாத்தில் பெண் காவலராக சந்திரா ராணி (30) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஏற்கனவே 3 பேரை காதலித்து திருமணங்கள் செய்து கொண்ட நிலையில் பெண் குழந்தையும் உள்ளது.
முதல் இரு கணவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டதாகவும், 3 வது கணவர் சந்தியாராணியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் 3 திருமணங்களை மறைத்து சரண் தேஜ் என்ற வசதியான இளைஞரை 4 வதாக, தனது காதல் வலையில் வீழ்த்திய சந்தியா ராணி, அவரை திருமணம் செய்து கொள்ளச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.
சந்தியா ராணியின் காதல் லீலைகள் குறித்து அறிந்தது அதிர்ச்சியடைந்த சரன் தேஜ் அவரை விட்டு விலக நினைத்துள்ளார்.
அதற்கு தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டுவேன் என்று சந்தியா ராணி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சரண் தேஜ் சந்தியா ராணியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் சரண் தேஜை அவரது வேலைக்கு செல்லவிடாமல் தடுத்ததோடு, தான் சார்ந்துள்ள மதத்துக்கு மாறுவதோடு தேவாலயத்தில் தான் பார்த்து வைத்துள்ள வேலையைத்தான் பார்க்க வேண்டும் என்று கூறி வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது.
இதனை ஏற்க மறுத்து அடம்பிடித்த காதல் கணவர் சரண் தேஜை அறையில் பூட்டி வைத்து அடித்துள்ளார் சந்தியாராணி.
சந்தியாராணியால் தொடர்ந்து கொடுமையை அனுபவித்த நான்காவது கணவர் சரண் தேஜ் இது குறித்து காவல் ஆணையருக்கும்,வாட்ஸ் அப்பில் புகார் கொடுத்து தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளார்.
இதையடுத்து பொலிசாரின் விசாரணையில் சந்தியாராணி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இது போன்ற திருமண மோசடியில் ஈடுபட்டு வந்ததும், பணத்திற்காக இப்படி செய்யும் சந்தியராணி தங்கள் பேச்சை கேட்பதில்லை என்று அவரது பெற்றோர் கூறி வந்ததும் தெரியவந்தது.
தற்போது சந்தியாராணியை பொலிசார் விசாரித்து வரும் நிலையில் அவரால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் புகார் கொடுக்கலாம் என கூறியுள்ளனர்.