காதலருடன் ஊரை விட்டு ஓடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! கழுத்தில் டயர் மாட்டி நடனம் ஆடவிட்ட உறவினர்கள்.. வைரலாகும் வீடியோ
இந்தியாவில் காதலருடன் ஊரை விட்டு தப்பிக்க நினைத்த இளம்பெண்ணுடன் சேர்ந்து மூன்று பேருக்கு உறவினர்கள் வினோதமான தண்டனை வழங்கியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
நவீன காலத்திற்கு மாறினாலும் சில இடங்களில் பாரம்பரியம் என்ற பெயரில் இன்று வரை மூடநம்பிக்கைகளை பின்பற்றப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மத்தியப்பிரதேசத்தில் கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் காதல் ஜோடி ஊரை விட்டு ஓட முயற்சி செய்துள்ளனர். இதற்கு அந்த பெண்ணின் சகோதரியும் உடந்தையாக இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூன்று பேரும் கிராம மக்களிடம் சிக்கி கொண்டனர்.
இதனையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் மூவரின் கழுத்தில் இருசக்கர வாகன டயரை மாட்டிவிட்டு நடுரோட்டில் பொது மக்கள் முன்னிலையில் நடனம் ஆட வைத்து தண்டனை கொடுத்துள்ளனர்.
A young tribal girl, her friend and a man with whom she eloped were punished by the young girl's family. Family members put tyres around their necks 4 out of 5 accused have been arrested @ndtv @ndtvindia @GargiRawat @manishndtv pic.twitter.com/JJgrweGtIY
— Anurag Dwary (@Anurag_Dwary) September 22, 2021
அது மட்டும் இல்லாமல் வாலிபரை ஒருவர் குச்சியால் சரமாரியாக தாக்கும் காட்சியும் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது.
இவர்களுக்கு இந்த தண்டனை வழங்கிய பெண்ணின் தந்தை, சகோதரன் மற்றும் உறவினர்களை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.