மங்கையரை போற்றும் மகளிர் தினம்!
உடலுறுதி கொண்ட ஆணைவிட மனஉறுதி கொண்ட பெண் சிறப்பானவள். தாயாக மனைவியாக தங்கையாக மகளாக என உறவின் அனைத்து பகுதியாக உள்ள பெண்ணிற்க்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்.
1975 ஆம் ஆண்டு மார்ச் 8ம் திகதியன்று சர்வதேச மகளிர் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.
பெண்களைப் போற்றும் விதமாகவும், பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தின சிறப்பு
ஒரு பெண் தன்னை தரம் உயர்த்துவது என்பது தனது குடும்பத்தையும், சமூகத்தையும் தரம் உயர்த்துவது ஆகும். முன்னைய காலத்தில் தான் பெண்கள் வீட்டில் முடங்கிகிடந்தார்கள். ஆனால் தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றார்கள்.
உதாரணமாக கூறுவோம் என்றால் அன்னை தெரஸா, இந்திரா காந்தி, கல்பனா சாவ்லா மற்றும் மேரி கோம் போன்ற பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்தவர்கள் ஆவார்கள்.
பெண்ணின் பெருமை
ஆண்களை எதிர்கொள்வது சிரம்ம என்ற நிலையிலிருந்து முன்னேறி அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதித்தே வருகின்றார்கள். பெண்கள் என்றாலே ஆசிரியர் மற்றும் செவிலியர் வேலைக்கு என்றே கூறுவார்கள். ஆனால் தற்போது பெண்கள் விமானம் ஓட்டுவது முதல் கணினி துறையில் கூட சாதித்து வருகின்றார்கள்.
பெண்ணின் கல்வி
அன்றைய காலக்கட்டத்தில் தான் பெண்களுக்கு கல்வி தேவையில்லை என நினைத்து வீட்டு வேலை செய்யவிட்டார்கள். ஆனால் தற்போது பெண்களே கல்வியிலும் சாதித்து வருகின்றார்கள். குடும்பத்தை சரியான முறையில் நகர்த்தி செல்ல பொருளாதார நிலை அதிகரிக்க பெண்களுக்கு கல்வி அவசியமாகும். அதே போன்று பெண் கல்வி கற்றால் மட்டுமே பிரச்சினைகளை சரி செய்ய, மாற்று வழிகளை கண்டறிய நடைமுறை செயலை அறிய என பல நன்மைகள் காணப்படுகிறது.
தாய்மை
கருவில் உருவான உயிரை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து மனதளவிலும், உடலளவிலும் பல மாற்றங்களை எதிர்கொண்டு குழந்தையை பிரசவிக்கும் வரை பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகம்.
ஆனால் அந்த பிரச்சனைகள் எதனால் ஏற்படுகிறது, அதை எவ்வாறு சரி செய்வது என்பதை தெரிந்து கொண்டால் தாய்மை என்பது ஒரு பெரும் வரமாகவே இருக்கும். ஒரு குடும்பத்தின் விருத்திகாக மட்டும் பெண்ணை நினைக்க கூடாது. அந்த வலியினை ஒவ்வொரு ஆணும் உணர்ந்தால் பெண்களுக்கான துஷ்பிரயோகங்களும் குறையும்.
பெண்களை ஆண்களுக்கு நிகராக பார்த்தால் பெண்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. அவ்வாறு இல்லாதமையினால் தான் பெண்களுக்கான சாவால்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.