பெண்களுக்கான மகளிர் மதிப்பு திட்டம்! உடனே அஞ்சலகத்திற்கு சென்று தொடங்குங்கள்
பெண்களுக்கான சிறப்பு திட்டமாக அஞ்சலகத்தில் தொடங்கப்பட்ட 'மகளிர் மதிப்பு திட்டம்-2023' -யை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
மகளிர் மதிப்பு திட்டம்
பெண்களுக்கு தொடங்கப்பட்ட மகளிர் மதிப்பு திட்டமானது மார்ச் 31 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும். பெண்கள் மற்றும் சிறுமிகள் உள்பட அனைத்து பெண்களும் இந்த திட்டத்தில் இணைந்து பலன் பெறலாம்.
இந்த மகளிர் மதிப்பு திட்டமானது பெண்களின் மேன்மையை உறுதிப்படுத்தும் விதமாக புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ,1000 -யும், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையும் செலுத்தலாம்.
இந்த திட்டத்தில் இணையும் பெண்கள் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், 3 மாத இடைவெளியில் அடுத்த கணக்கை தொடங்க வேண்டும்.
எவ்வளவு வட்டி?
இந்த திட்டத்தில் செலுத்தப்பட்ட முதலீட்டுக்கு காலாண்டுக்கு ஒருமுறை கூட்டுவட்டி 7.5% சேர்க்கப்படுகிறது. இதனுடைய முதிர்வு காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
இதில், நீங்கள் ஓராண்டுக்கு பிறகு இருப்புத்தொகையில் இருந்து 40 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கி 6 மாதத்திற்குள் முன்முதிர்வு செய்யப்பட்டால் வட்டி விகிதம் 5.5% முதலீட்டு தொகையுடன் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் நீங்கள் பயன் பெற விரும்பினால் அருகில் இருக்கும் அஞ்சலத்திற்கு சென்று தொடங்கலாம். ஏற்கனவே, தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் இதற்கான உரிய படிவத்தை பூர்த்தி செய்தாலே போதும்.
இதற்காக, ஆதார் அட்டை, ஃபான் கார்டு எண் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் இரண்டு புகைப்படங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |